சென்னையில் அதிர்ச்சி! மின் கம்பி பிடித்து இளைஞர் பலி..!!!753597000


சென்னையில் அதிர்ச்சி! மின் கம்பி பிடித்து இளைஞர் பலி..!!!


சென்னையில் இளைஞர் ஒருவர் மின் கம்பி பிடித்த படி, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தலைநகர் சென்னையை பொருத்தவரையில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ்.

இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் தினேஷ்-க்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திய தினேஷ், வழக்கம் போல் மாடிக்கு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது மின் வயரை பிடித்தவாறு உயிரிழந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், கொலையா? அல்லது தற்கொலை? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog