NEET PG 2022 ஒத்திவைப்பு தொடர்பான மனு: உச்ச நீதிமன்ற விசாரணை



புதுடெல்லி: மே 21ஆம் தேதி நடைபெறவிருந்த நீட்-பிஜி 2022 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ஜே டிஒய் சந்திரசூட் தலைமையிலான சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

2022க்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET PG 2022) ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கோரிய மருத்துவர்களின் மனு இது. இந்த மனு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் NEETPG 21 கவுன்சிலிங்குடன் மோதல்போக்கை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.  

மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கண்ணா இந்த மனுவை அவசரமாகப் பட்டியலிடக் கோரியதைத் தொடர்ந்து, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக அறிவித்திருந்தது.

education
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog