தமிழ் புறக்கணிப்பு



தமிழகத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தபால் அலுவலகங்கள், ரயில்வே அலுவலகங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பு மறைமுகமாக தொடர்ந்து நடந்து வருகிறது. ஒன்றிய அரசின் துறைகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டு  வருகின்றனர். ஏற்கனவே கல்வித்துறையில் இந்தி திணிப்பு தொடங்கி விட்ட நிலையில், ஜிப்மர் ேபான்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும் இந்தி திணிப்பை ஒன்றிய அரசு லாவகமாக கையாண்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராகவும், மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டும், ஒன்றிய அரசு அவற்றை கண்டுகொள்வதே இல்லை.

 தற்போது வங்கிகளிலும் வடமாநிலத்தவரை நுழைக்க முயற்சிகள் அப்பட்டமாக நடக்கின்றன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog