ஒகேனக்கல்லில் விவசாயிகள் பேரணி-ஆர்ப்பாட்டம் மேகதாது அணை கட்டினால் நாங்கள் தகர்த்து எறிவோம்: மாநில தலைவர் சின்னசாமி பேட்டி



தர்மபுரி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தர்மபுரியில் இருந்து வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பென்னாகரம் மடம் சோதனைச் சாவடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு, வாகன பேரணி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விவசாயிகள் பங்கேற்றனர். இப்பேரணி ஒகேனக்கல் சின்னாறு அருகே முடிவடைந்தது. அங்கிருந்து விவசாயிகள் ஊர்வலமாக நடந்து சென்று, நெடுஞ்சாலைத்துறை பயணிகள் மாளிகை அருகே,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog