சாலைகளில் திரிந்த மாடுகளின் உரிமையாளருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்


சாலைகளில் திரிந்த மாடுகளின் உரிமையாளருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்


சென்னை: சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி  பொது சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு  மாடு ஒன்றிற்கு ₹1,550 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, மார்ச் 1 முதல் 16ம்  தேதி வரை சென்னை முழுவதும் சோதனை நடத்தப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக  சாலையில் சுற்றித் திரிந்த 455 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன்  உரிமையாளர்களுக்கு தலா ₹1,550 வீதம் ₹7,05,250 அபராதம் விதிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog