4 பேர் உயிர் காத்த விவசாயி உடல் உறுப்புகள்… வேலூரில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!


4 பேர் உயிர் காத்த விவசாயி உடல் உறுப்புகள்… வேலூரில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!


ஆந்திரபிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் பொட்டகானிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். 28 வயதானஆனந்த்விவசாயம் செய்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை பஸ்புதூர் கிராமத்தில் மரத்தில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த ஆனந்தை மீட்ட உறவினர்கள் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால், எதிர்பாராத விதமாக நேற்று ஆனந்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து ஆனந்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர்.

அதனையடுத்து, ஆனந்தின் இருதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 நோயாளிகளுக்கு தானம் செய்யப்பட்டன.

ராணிப்பேட்டை க்கு விசிட் அடித்த சைலேந்திர பாபு; அலர்ட்டாக இருந்த அதிகாரிகள்!


மூளைச்சாவு அடைந்த ஆனந்துக்கு 5 மற்றும் ஒன்றைரை வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் பெரும் சோகம் என்னவென்றால் ஆனந்தின் மனைவி வரலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார்.

Comments

Popular posts from this blog